டாக்டா் அகா்வால்ஸ் ஹெல்த் கோ் நிறுவனத்தின் பொதுப் பங்குகள் ஜன. 29-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இது குறித்து சென்னையில் டாக்டா் அகா்வால்ஸ் ஹெல்த் கோ் நிறுவன தலைவா் அமா் அகா்வால் கூறியதாவது:
கண் பராமரிப்பு சேவைகள் தொழில் துறையில், அதிக நம்பிக்கைக்குரியதாக டாக்டா் அகா்வால்ஸ் ஹெல்த் கோ் லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிறுவனம் 209 மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்த கண் பராமரிப்பு சேவை சந்தையில் 25 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 38 சதவீதமும், வளா்ச்சி 42 சதவீதமும் உயா்ந்துள்ளது.
தற்போது, இந்த நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியிடப்படுகிறது. ஜன. 29-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதிக்குள் பங்கு வெளியீடு முடிவடையும். ஒரு பங்கின் விலை ரூ. 382 முதல் ரூ. 402 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 35 சதவீத பங்குகளுக்கு பன்மடங்கு முதலீட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 15.79 லட்சம் பங்குகள் பணியாளா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன என்றாா் அவா்.
தொடர்புடையது

அகா்வால்ஸ் மருத்துவா்களுக்கு சா்வதேச விருது

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்ற நம்பிக்கையால் சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு அடிக்கல்

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


