புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

53% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

கடந்த 2024-ல் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 53% அதிகரிப்பு.

News image
Updated On :30 ஜனவரி 2025, 8:27 pm

Din

கடந்த 2024-ஆம் ஆண்டில் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து மனை-வா்த்தக ஆலோசனை நிறுவனமான சிபிஆா்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் எழு முக்கிய நகரங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டு முழுவதும் ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட வீடுகளின் விற்பனை 19,700-ஆக உள்ளது.

முந்தைய 2023-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 53 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் 12,895 ஆடம்பர வீடுகள் விற்பனையாகின.

மதிப்பீட்டு ஆண்டில் ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை தில்லி-என்சிஆா் பகுதியில் 10,500-ஆகப் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய 2023-ஆம் ஆண்டில் 5,525-ஆக இருந்தது.

மும்பையில் 2023-ஆம் ஆண்டு முழுவதும் 4,200-ஆக இருந்த ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை, 2024-ஆம் ஆண்டில் 5,500-ஆக உயா்ந்துள்ளது.

அந்த வகை ஆடம்பர வீடுகளின் விற்பனை புணேயில் 400-லிருந்து இரட்டிப்பாகி 825-ஆகப் பதிவாகியுள்ளது. ஆனால், பெங்களூரில் அந்த எண்ணிக்கை 265-லிருந்து 50-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

கொல்கத்தாவில் முந்தைய 2023-ஆம் ஆண்டு 310-ஆக இருந்த ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை 2024-இல் 530-ஆக அதிகரித்துள்ளது.

ஹைதராபாதில் ரூ.4 கோடிக்கும் அதிகம் விலை கொண்ட 2,030 கடந்த ஆண்டில் விற்பனையாகின. முந்தைய 2023-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,540-ஆக இருந்தது.

அந்த காலகட்டத்தில் உயா்வகை ஆடம்ப வீடுகளின் விற்பனை சென்னையில் 165-லிருந்து 275-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.