உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் இரட்டிப்பு!

பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இரு மடங்கு அதிகரித்து ரூ.4,508 கோடி ரூபாயாக உள்ளது.

News image

பஞ்சாப் நேஷனல் பேங்க்

Updated On :31 ஜனவரி 2025, 5:06 pm IST

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இரு மடங்காக அதிகரித்து ரூ.4,508 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,223 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் ரூ.29,962 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.34,752 கோடியானது. அதே வேளையில் வட்டி வருமானமும் ரூ.27,288 கோடியிலிருந்து ரூ.31,340 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல் வங்கியின் நிகர வாராக் கடன் ஒரு வருடத்திற்கு முன்பு 6.24 சதவிகிதத்திலிருந்து 4.09 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இதேபோல் வங்கியின் மூன்றாவது காலாண்டு முடிவில் வங்கியின் நிகர வாராக் கடன் 0.96 சதவிகிதத்திலிருந்து 0.41 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, வாராக் கடனுக்கான ஒதுக்கீடு கணிசமாகக் குறைந்து ரூ.318 கோடியானது. இதுவே ஓராண்டுக்கு முன்பு ரூ.2,994 கோடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.