மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஒருமுறை சார்ஜுக்கு 142 கி.மீ. பயணம்! ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்!

ஹீரோவின் புதிய மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி...

News image

விடா ஸ்கூட்டர் - Photo : Vida Website

Updated On :10 ஜூலை 2025, 2:34 pm IST

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய விடா வி-எக்ஸ் மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா என்ற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றது.

அந்த வகையில், புதிதாக விடா வி-எக்ஸ் 2 பிளஸ் மற்றும் வி-எக்ஸ் 2 கோ என்ற இரு மாடல்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.

சிறப்பம்சங்கள்..

வி-எக்ஸ் 2 பிளஸ் ஸ்கூட்டரில் 3.4 கிலோவாட் திறன் கொண்ட இரு பேட்டரிகள் உள்ளன. இவற்றை தனியாக எடுத்து சார்ஜ் செய்துகொள்ளலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 142 கி.மீ. வரை செல்லும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்கூட்டரில் நேவிகேஷன் வசதியுடன் 4.3 அங்குலம் டி.எஃப்.டி. திரை உள்ளது.

ஆரம்ப விலை - ரூ. 99,990 ஆகும்.

வி-எக்ஸ் 2 கோ ஸ்கூட்டரில் 2.2 கிலோவாட் திறன் கொண்ட ஒரு பேட்டரி உள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 92 கி.மீ. வரை செல்லும். அதிவேக சார்ஜரை பயன்படுத்தினால் ஒருமணி நேரத்தில் 80 சதவிகிதம் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது.

எல்.சி.டி. டிஸ்பிளே உள்ள இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 84,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Summary

Hero MotoCorp has launched the new Vida VX model of electric scooters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.