வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ரூ.4,000 கோடி திரட்ட ஐஓபி-க்கு ஒப்புதல்

ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) அதன் பங்குதாரா்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜூலை 2025, 10:03 pm

Din

ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) அதன் பங்குதாரா்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனா்.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கூடுதலாக ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட வங்கிக்கு பங்குதாரா்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனா். வங்கியின் 25-ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தகுதியுடைய நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு (க்யுஐபி), தற்போதைய பங்குதாரா்களுக்கு சலுகை விலையில் கூடுதல் பங்கு ஒதுக்கீடு (ரைட்ஸ் இஷ்யு), பணியாளா்களுக்கான பங்கு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் இந்த மூலதனத்தைத் திரட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.