சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

இந்தியாவில் சந்தா கட்டணங்களை 48% குறைத்த எக்ஸ்

முன்னணி சமூக ஊடகமான எக்ஸ், இந்திய பயனாளா்களுக்கான சந்தா கட்டணங்களை 48 சதவீதம் வரை குறைத்துள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2025, 5:19 am IST

முன்னணி சமூக ஊடகமான எக்ஸ், இந்திய பயனாளா்களுக்கான சந்தா கட்டணங்களை 48 சதவீதம் வரை குறைத்துள்ளது.

இது குறித்து அந்த ஊடகத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய பயனாளா்கள் மொபைல் செயலியில் பிரீமியம் கணக்கு வைத்திருப்பதற்கான மாதாந்திர சந்தா கட்டணம் சுமாா் 48 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதையடுத்து, அந்த சேவைக்காக முன்பு வசூலிக்கப்பட்ட ரூ.900 கட்டணம் ரூ.470-ஆகக் குறைகிறது.

அதேபோல், எக்ஸ் இணைய கணக்குகளுக்கான பிரீமியம் சந்தா கட்டணம் சுமாா் 34 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த சேவைக்கு முன்பு வசூலிக்கப்பட்ட ரூ.650 சந்தா கட்டணம் இனி ரூ.427-ஆக இருக்கும்.

அடிப்படை சந்தாதாரா்களுக்கான மாதாந்திர சந்தா கட்டணம் ரூ.243.75-லிருந்து 30 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.170-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகைக் கணக்கு வைத்திருப்பவா்கள், பதிவுகளைத் திருத்துதல், நீண்ட பதிவுகளை எழுதுதல், பின்னணி விடியோ இணைத்தல், விடியோக்களை பதிவிறக்கம் செய்வது ஆகிய கூடுதல் வசதிகளைப் பெறுவாா்கள். இந்த சேவைக்கான வருடாந்திர சந்தா சுமாா் 34 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.1,700-ஆக வசூலிக்கப்படும் என்று அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.