நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

எச்டிஎஃப்சி நிகர லாபம் 1.31% சரிவு!

எச்டிஎஃப்சி வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் 2025 காலாண்டில் 1.31 சதவிகிதமாக சரிந்து ரூ.16,258 கோடியாக உள்ளது.

News image

எச்டிஎஃப்சியின் நிகர லாபம் 5,331 கோடியாக உயர்வு

Updated On :20 ஜூலை 2025, 7:41 pm IST

மும்பை: எச்டிஎஃப்சி வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் 2025 காலாண்டு முடிவில் 1.31 சதவிகிதமாக சரிந்து ரூ.16,258 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியானது ரூ.16,475 கோடி நிகர லாபம் ஈட்டியது.

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி அதன் முதல் காலாண்டில் ரூ.18,155 கோடி நிகர லாபம் ஈட்டியது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.16,174 கோடியாக இருந்தது.

ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.99,200 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே அதன் முந்தைய ஆண்டு, இதே காலத்தில் இது ரூ.83,701 கோடியாக இருந்தது.

மொத்த செலவுகள் ரூ.63,467 கோடியாகவும், இதுவே அதன் முந்தைய நிதியாண்டில் அதே காலத்தில் இது ரூ.59,817 கோடியாக இருந்தது. நிகர வட்டி வரம்பு முந்தைய காலாண்டில் 3.46 சதவிகிதத்திலிருந்து 3.35 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

ஒட்டுமொத்த ஒதுக்கீடுகளில் முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.2,602 கோடியிலிருந்து ரூ.14,442 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி செயல்பாடற்ற சொத்துக்கள் விகிதம் மூன்று மாதங்களுக்கு முன்பு 1.33 சதவிகிதத்திலிருந்து 1.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

Summary

HDFC Bank on Saturday posted a consolidated net profit of Rs 16,258 crore for the June 2025 quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.