ஒன்பிளஸ் நிறுவனத்தின் பேட் லைட் எனும் கையடக்கக் கணினி ரூ.15 ஆயிரத்திற்கு கிடைக்கிறது.
இந்நிறுவனத்தின் வேறு எந்த கையடக்கக் கணினியிலும் இல்லாத வகையில் அதிக பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த விலையில் இதுவொரு சிறந்த முதலீடாகவே ஒன்பிளஸ் கருதுகிறது.
இரு வேறு வகையான நினைவகங்களுடன் ஒன்பிளஸ் பேட் லைட் அறிமுகமாகியுள்ளது. 6GB உள்நினைவகமும், 128GB நினைவகமும் கொண்ட கையடக்கக் கணினியின் விலை ரூ. 12,999.
இதேபோன்று 8GB உள்நினைவகம் மற்றும் 128GB நினைவகம் கொண்ட கையடக்கக் கணினி விலை ரூ. 14,999. வங்கிகளின் கடன் அட்டைகளைப் பொறுத்து ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை தள்ளுபடியும் பெறலாம்.
சிறப்புகள் என்னென்ன?
ஒன்பிளஸ் பேட் லைட் 11 அங்குல எச்.டி. மற்றும் எல்.இ.டி. திரை கொண்டது. திரையின் திறன் 1920×1200 அளவு உடையது.
பயன்படுத்துவதற்கு திரை சுமூகமாக இருக்கும் வகையில் 90Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒளிக்கற்றைகள் திரையில் விழுந்து எதிரொலிக்காத வண்ணம் திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்ட நேரம் சிரமமின்றி பயன்படுத்தலாம்.
மீடியாடெக் ஹெலியோ ஜி 100 என்ற சிப் உடன் ஆக்ஸிஜன் ஓஎஸ் புராசஸர் உடையது.
128GB நினைவகத்தையும் 6GB உள்நினைவகத்தையும் கொண்டது.
மற்ற கையடக்கக் கணினியில் 8000mAh திறனுடைய பேட்டரி வழங்கப்பட்டிருந்த நிலையில், டேப் லைட்டில் 9340mAh திறனுடைய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தொடர்ந்து 80 மணிநேரம் பாடல்கள் கேட்கலாம். 11 மணிநேரம் விடியோ பார்க்கலாம். வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 33W சூப்பர் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தனை அம்சங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இதன் விலை ரூ. 19,692 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வைஃபை வேரியன்ட் உடைய கையடக்கக் கணினி விலை ரூ. 23,188 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதிக பேட்டரி திறனுடன் கூடிய 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!
Summary
OnePlus Pad Lite Launches With 11-Inch Display, 9340mAh Battery Under Rs 15000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரண்டு நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி... சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்வு! 23,200 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!

ஒன்பிளஸ், ஐகியூ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஷாவ்மியின் 17டி அறிமுகம்!

அதிரடி சலுகையில் ஆப்பிள் ஐபோன் 17 வாங்கலாம்! ஃபிளிப்கார்ட் சலுகைகள் என்னென்ன?

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



