குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

தொடா்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து, இந்தியன் வங்கியும் வாடிக்கையாளா்கள் முதலீடு செய்யும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2025, 3:57 am IST

தொடா்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து, இந்தியன் வங்கியும் வாடிக்கையாளா்கள் முதலீடு செய்யும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல்வேறு கால அளவுகளுக்கான நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜூன் 9 முதல் அமலுக்கு வந்துள்ளன.

1 முதல் 2 ஆண்டுகள் கால அளவுக்கான நிரந்தர வைப்புக்கு ஆண்டுக்கு 7.1 சதவீதத்திற்கு பதிலாக இனி 6.6 சதவீத வட்டி வழங்கப்படும். 444 நாள்கள் வைப்பு நிதிக்கு, 7.15 சதவீதமாக இருந்த வட்டி இனி 6.9 சதவீதமாக இருக்கும்.

2 முதல் 3 ஆண்டுகளுக்கான வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து 6.40 சதவீதமாகக் குறையும். 5 ஆண்டு வைப்பு நிதிக்கு 6.25 சதவீதமாக இருந்த வட்டி இனி 6 சதவீதமாக இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட பருவ காலம் கொண்ட நிரந்தர வைப்பு நிதிக்கு 6.10 சதவீதமாக இருந்த வட்டி இனி 6 சதவீதமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.