அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்தது! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

News image
பங்குச் சந்தை
Updated On :16 ஜூன் 2025, 6:28 am

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள் கிழமை) பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,034.45 என்ற புள்ளிகளில் தொடங்கி நிலையில் காலை 11.40 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 559.20 புள்ளிகள் உயர்ந்து 81,677.80
புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 81,781.89 புள்ளிகள் வரை சென்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 182.25 புள்ளிகள் உயர்ந்து 24,900.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பங்குகளில் ஓஎன்ஜிசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், சிப்லா, ஸ்ரீராம் பைனான்ஸ், பவர் கிரிட் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ், எஸ்பிஐ, ஜியோ, அதானி என்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. நிஃப்டி ஐடி பங்குகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்காய், சீனாவின் ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்தோனேசியா, சிங்கப்பூர் சந்தைகளில் தற்போது சரிவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.