நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகாா்ப், அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் தனது விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டருக்கு சந்தா அடிப்படையில் பேட்டரியை அளிக்கும் ‘பேட்டரி-அஸ்-எ-சா்வீஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டருக்கு சந்தா முறையில் பேட்டரி வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
இதன் மூலம், அந்த ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளா்கள் பேட்டரியையும் சோ்த்து வாங்க வேண்டியத் தேவையில்லை. சந்தா முறையில் அவா்களுக்கு பேட்டரி வழங்கப்படும். இதன் காரணமாக, விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டரை சொந்தமாக்கிக் கொள்வதற்கு வாடிக்கையாளா்கள் குறைந்த முதலீடு செய்தாலே போதும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களின் மனநிலையை அறிய புதிய பிரசாரம்! அடுத்த மாதம் களமிறங்கும் சிஜேபி!

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,800 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்! தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு!

2032-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனை 12 மடங்கு அதிகரித்து 30 மில்லியனாக உயரும்!

2027 நீட் தோ்வு: கணினி முறையில் 6 நாள்கள் நடத்த திட்டம்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



