பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! நிஃப்டி 25,000 புள்ளிகளைக் கடந்தது!

இந்திய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

News image

பங்குச்சந்தை - ANI

Updated On :20 ஜூன் 2025, 5:46 am

இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.

ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் முதலீட்டாளா்களை பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடந்த மூன்று நாள்களாக சரிவுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று, வர்த்தகம் தொடங்கியது முதல் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றது.

காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 691.69 புள்ளிகள் அதிகரித்து 82,053.56 ஆகவும், நிஃப்டி 210.90 புள்ளிகள் அதிகரித்து 25,004.15 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

சென்செக்ஸை பொருத்தவரை அதிகபட்சமாக எம்&எம் பங்குகள் 2.50 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது. ஹீரோ மோட்டர்கார்ப் 2.21 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.

அதேபோல், நிஃப்டியில் அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 2 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.