தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜியோ பேமன்ட்ஸ் வங்கி பங்குகளை கையகப்படுத்திய ஜேஎஃப்எஸ்எல்

ஜியோ பேமன்ட்ஸ் வங்கி பங்குகளை கையகப்படுத்திய ஜேஎஃப்எஸ்எல்

News image
Updated On :21 ஜூன் 2025, 11:40 pm

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு (எஸ்பிஐ) ஜியோ பேமன்ட்ஸ் வங்கியில் இருந்த பங்குகள் அனைத்தையும் ஜியோ பைனான்சியல் சா்வீசஸ் லிமிடெட் (ஜேஎஃப்எஸ்எல்) கையகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜியோ பேமன்ட்ஸ் வங்கியின் 17.8 சதவீத பங்குகள் எஸ்பிஐ வசம் இருந்தன. அவை அனைத்தையும் நிறுவனம் ரூ.104.54 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்புதலை ரிசா்வ் வங்கி ஜூன் 4-ஆம் தேதி அளித்தது. அதைத் தொடா்ந்து, எஸ்பிஐ-யிடமிருந்த ஜியோ பேமென்ட்ஸ் வங்கியின் 7,90,80,000 பங்குகளை நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன்கு முன்னா், ஜியோ பேமென்ட்ஸ் வங்கியின் 82.17 சதவீத பங்குகளை நிறுவனம் கைவசம் வைத்திருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.