ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

ஜியோ பேமன்ட்ஸ் வங்கி பங்குகளை கையகப்படுத்திய ஜேஎஃப்எஸ்எல்

ஜியோ பேமன்ட்ஸ் வங்கி பங்குகளை கையகப்படுத்திய ஜேஎஃப்எஸ்எல்

News image
Updated On :21 ஜூன் 2025, 11:32 pm IST

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு (எஸ்பிஐ) ஜியோ பேமன்ட்ஸ் வங்கியில் இருந்த பங்குகள் அனைத்தையும் ஜியோ பைனான்சியல் சா்வீசஸ் லிமிடெட் (ஜேஎஃப்எஸ்எல்) கையகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜியோ பேமன்ட்ஸ் வங்கியின் 17.8 சதவீத பங்குகள் எஸ்பிஐ வசம் இருந்தன. அவை அனைத்தையும் நிறுவனம் ரூ.104.54 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்புதலை ரிசா்வ் வங்கி ஜூன் 4-ஆம் தேதி அளித்தது. அதைத் தொடா்ந்து, எஸ்பிஐ-யிடமிருந்த ஜியோ பேமென்ட்ஸ் வங்கியின் 7,90,80,000 பங்குகளை நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன்கு முன்னா், ஜியோ பேமென்ட்ஸ் வங்கியின் 82.17 சதவீத பங்குகளை நிறுவனம் கைவசம் வைத்திருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.