மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்வுடன் முடிவு!

சென்செக்ஸ் 158.32 உயர்ந்து 82,055.11 புள்ளிகளாகவும், நிஃப்டி 72.45 புள்ளிகள் உயர்ந்து 25,044.35 புள்ளிகளாக நிலைபெற்றது.
பங்குச் சந்தைகள்
பங்குச் சந்தைகள்
Published on
Updated on
1 min read

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த மீறல் பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருந்ததால், முதலீட்டாளர்கள் சற்று லாபம் ஈட்யதின் வெளிப்பாட்டின் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சற்றே உயர்ந்து முடிந்தன.

இன்றயை காலை நேர இன்ட்ரா-டே வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,121.37 புள்ளிகள் உயர்ந்து 83,018.16 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30-பங்கு சென்செக்ஸ் 158.32 உயர்ந்து 82,055.11 புள்ளிகளாகவும், நிஃப்டி 72.45 புள்ளிகள் உயர்ந்து 25,044.35 புள்ளிகளாக நிலைபெற்றது.

அதே வேளையில் மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக சரிந்தன.

இதற்கிடையில், போர் நிறுத்த அறிவிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, பங்குச் சந்தையில் லாப பதிவை சுருக்கியது. அதே வேளையில் மத்திய கிழக்கில் உள்ள பதற்றங்கள், முதலீட்டாளர்களின் மனநிலையை வெகுவாக சீர்குலைந்தன.

சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், கோட்டக் மஹிந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் டைட்டன் ஆகியவை உயர்ந்தும் இதற்கு நேர்மாறாக பவர் கிரிட், டிரென்ட், என்டிபிசி, மாருதி, எச்.சி.எல் டெக் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

துறைகளில், பொதுத்துறை வங்கி குறியீடு அதிகபட்சமாக 1.40 சதவிகிதம் உயர்ந்த நிலையில் பாதுகாப்பு குறியீடு அதிகபட்சமாக இன்று 2.35 சதவிகிதம் சரிந்தது.

துறை வாரியாக நிஃப்டி-யில் பொதுத்துறை வங்கி 1.5 சதவிகிதமும், நிஃப்டி மெட்டல் 1 சதவிகிதமும் உயர்ந்தன.

நிஃப்டி வங்கி, ஆட்டோ, தனியார் வங்கி மற்றும் நுகர்வோர் சாதனங்களும் 0.7 சதவிகிதமும் உயர்ந்த நிலையில் நிஃப்டி மீடியா 1 சதவிகிதம் சரிந்து முடிவடைந்தன.

ரூ.836 கோடி ஆர்டரைப் பெற்றுள்ளதாக போண்டாடா இன்ஜினியரிங் கூறியதையடுத்து அதன் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்தன.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிந்ததைத் தொடர்ந்து இன்டர்குளோப் ஏவியேஷன் பங்குகள் 4 சதவிகிதம் வரை உயர்ந்தன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை கணிசமாக உயர்ந்தன.

மத்திய நேர வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தைகள் சற்று உயர்ந்து வர்த்தகமாயின.

அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்ந்து முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 3.20 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு $69.13 ஆக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.1,874.38 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,591.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com