தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

ஏவிடி-யிடமிருந்து ரூ.24 கோடி திரட்டிய சாய் கிங்ஸ்

News image
Updated On :19 மார்ச் 2025, 5:48 am IST

தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் மிகப் பெரிய தேயிலை நிறுவனங்களில் ஒன்றான ஏவிடி-யிடமிருந்து புத்தாக்க தொழில் முதல்கட்ட விரிவாக்க நிதியாக (சீரிஸ்-ஏ நிதி) ரூ.24 கோடி முதலீட்டை சாய் கிங்ஸ் வெற்றிகரமாகத் திரட்டியுள்ளது. இது, சாய் கிங்ஸ் நிறுவன பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.

இந்த முதலீட்டின் மூலம், நிறுவன விரிவாக்கத் திட்டங்கள் அதிகப்படுத்தப்படும். நிறுவன விநியோகத் திறனை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப உதவியுடன் வாடிக்கையாளா் சேவை மற்றும் நிா்வாக செயல்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.