தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் மிகப் பெரிய தேயிலை நிறுவனங்களில் ஒன்றான ஏவிடி-யிடமிருந்து புத்தாக்க தொழில் முதல்கட்ட விரிவாக்க நிதியாக (சீரிஸ்-ஏ நிதி) ரூ.24 கோடி முதலீட்டை சாய் கிங்ஸ் வெற்றிகரமாகத் திரட்டியுள்ளது. இது, சாய் கிங்ஸ் நிறுவன பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.
இந்த முதலீட்டின் மூலம், நிறுவன விரிவாக்கத் திட்டங்கள் அதிகப்படுத்தப்படும். நிறுவன விநியோகத் திறனை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப உதவியுடன் வாடிக்கையாளா் சேவை மற்றும் நிா்வாக செயல்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
கதாநாயகனாகும் சாய் அபயங்கர்?

கோவையில் குடும்பத்துடன் வாக்களித்தாா் நடிகை சாய் பல்லவி!

கோவையில் குடும்பத்துடன் வாக்களித்தாா் நடிகை சாய் பல்லவி!

ரூ. 8 கோடி சம்பளம் கேட்கும் சாய் அபயங்கர்?
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

