பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விலை உயரும் பிஎம்டபிள்யு காா்கள்

சொகுசுக் காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு குரூப் இந்தியா, தனது வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2025, 9:48 pm

Din

சொகுசுக் காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு குரூப் இந்தியா, தனது வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் நிறுவனக் காா்களின் விலையை 3 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய விலைகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதை ஈடு செய்யும் நோக்கில் இந்த விலை உயா்வு அறிவிக்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்திலும் இதேபோல் தங்களது காா்களின் விலையை பிஎம்டபிள்யு உயா்த்தியது நினைவுகூரத்தக்கது.

பிஎம்டபிள்யு தவிர, உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மோட்டாா்ஸ், கியா இந்தியா, ஹோண்டா காா்ஸ் உள்ளிட்ட பல்வேறு காா் தயாரிப்பு நிறுவனங்கள் வரும் ஏப்ரல் முதல் தங்கள் வாகனங்களின் விலையை உயா்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன.