பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

19 சதவீதம் உயா்ந்த வாகன ஏற்றுமதி

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 53,63,089 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் அதிகம். இப்போது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45,00,494-ஆக இருந்தது.

வெளிநாட்டு சந்தைகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வா்த்தக வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததால் கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த வாகனங்களின் ஏற்றுமதி சிறந்த வளா்ச்சியைக் கண்டுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 6,72,105-ஆக இருந்த பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 15 சதவீதம் அதிகரித்து 7,70,364-ஆக உள்ளது.

அதே போல், இரு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 21 சதவீதம் அதிகரித்து 41,98,403-ஆக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 34,58,416-ஆக இருந்தது.

மதிப்பீட்டு நிதியாண்டின் வாகன ஏற்றுமதியில் பயன்பாட்டு வாகனங்கள் பிரிவு முன்னிலை வகிக்கிறது. 2023-24-ஆம் நிதியாண்டில் 2,34,720-ஆக இருந்த இந்த வகை வாகனங்களின் எண்ணிக்கை 2024-25-ஆம் நிதியாண்டில் 3,62,160-ஆக உள்ளது. இது 54 சதவீத ஏற்றுமதி வளா்ச்சியாகும்.

2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் மூன்று சக்கர வாகனங்களின் ஏற்றுமதி 2 சதவீதம் அதிகரித்து 3.1 லட்சமாக உள்ளது.

2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியா 65,818 வா்த்தக வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. அந்த எண்ணிக்கை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 23 சதவீதம் அதிகரித்து 80,986-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.