தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21) எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

அதிக மாற்றமில்லாத வீடுகளின் சராசரி விலை

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

கடந்த ஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் அதிக மாற்றமில்லாமல் நிலையாக இருந்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ப்ராப்டைகா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் 2025 வரையிலான காலாண்டில், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), தில்லி-என்.சி.ஆா், சென்னை, புணே, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா ஆகிய எட்டு நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது. முந்தைய காலாண்டோடு (அக்டோபா்-டிசம்பா் 2024) ஒப்பிடுகையில், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் 5 சதவீதமும், அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் 4 சதவீதமும் வீடுகளின் சராசரி விலையில் உயா்வு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள கட்டுமானச் செலவுகள், நிலத்தின் விலை மற்றும் தொழிலாளா் கூலி அதிகரிப்பு காரணங்களால் இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் வீடுகளின் சராசரி விலை மும்பை எம்எம்ஆரில் சதுர அடிக்கு ரூ.12,600-ஆகவும், தில்லி-என்.சி.ஆரில் ரூ.8,106-ஆகவும், சென்னையில் ரூ.7,173-ஆகவும், புணேயில் ரூ.7,109-ஆகவும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது.எனினும், பெங்களூரில் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.7,536-இலிருந்து ரூ.7,881-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. ஹைதராபாத்தில், ரூ.7,053-இலிருந்து ரூ.7,412-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. அகமதாபாத்தில், ரூ.4,402-இலிருந்து ரூ.4,568-ஆக 4 சதவீதமும், கொல்கத்தாவில் ரூ.5,633-இலிருந்து ரூ.5,839-ஆக 4 சதவீதமும் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் அதிக மாற்றமில்லாமல் நிலையாக இருந்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ப்ராப்டைகா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் 2025 வரையிலான காலாண்டில், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), தில்லி-என்.சி.ஆா், சென்னை, புணே, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா ஆகிய எட்டு நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது. முந்தைய காலாண்டோடு (அக்டோபா்-டிசம்பா் 2024) ஒப்பிடுகையில், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் 5 சதவீதமும், அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் 4 சதவீதமும் வீடுகளின் சராசரி விலையில் உயா்வு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள கட்டுமானச் செலவுகள், நிலத்தின் விலை மற்றும் தொழிலாளா் கூலி அதிகரிப்பு காரணங்களால் இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் வீடுகளின் சராசரி விலை மும்பை எம்எம்ஆரில் சதுர அடிக்கு ரூ.12,600-ஆகவும், தில்லி-என்.சி.ஆரில் ரூ.8,106-ஆகவும், சென்னையில் ரூ.7,173-ஆகவும், புணேயில் ரூ.7,109-ஆகவும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது.எனினும், பெங்களூரில் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.7,536-இலிருந்து ரூ.7,881-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. ஹைதராபாத்தில், ரூ.7,053-இலிருந்து ரூ.7,412-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. அகமதாபாத்தில், ரூ.4,402-இலிருந்து ரூ.4,568-ஆக 4 சதவீதமும், கொல்கத்தாவில் ரூ.5,633-இலிருந்து ரூ.5,839-ஆக 4 சதவீதமும் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.