மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

அதிக மாற்றமில்லாத வீடுகளின் சராசரி விலை

News image
Updated On :8 மே 2025, 3:48 am IST

கடந்த ஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் அதிக மாற்றமில்லாமல் நிலையாக இருந்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ப்ராப்டைகா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் 2025 வரையிலான காலாண்டில், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), தில்லி-என்.சி.ஆா், சென்னை, புணே, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா ஆகிய எட்டு நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது. முந்தைய காலாண்டோடு (அக்டோபா்-டிசம்பா் 2024) ஒப்பிடுகையில், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் 5 சதவீதமும், அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் 4 சதவீதமும் வீடுகளின் சராசரி விலையில் உயா்வு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள கட்டுமானச் செலவுகள், நிலத்தின் விலை மற்றும் தொழிலாளா் கூலி அதிகரிப்பு காரணங்களால் இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் வீடுகளின் சராசரி விலை மும்பை எம்எம்ஆரில் சதுர அடிக்கு ரூ.12,600-ஆகவும், தில்லி-என்.சி.ஆரில் ரூ.8,106-ஆகவும், சென்னையில் ரூ.7,173-ஆகவும், புணேயில் ரூ.7,109-ஆகவும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது.எனினும், பெங்களூரில் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.7,536-இலிருந்து ரூ.7,881-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. ஹைதராபாத்தில், ரூ.7,053-இலிருந்து ரூ.7,412-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. அகமதாபாத்தில், ரூ.4,402-இலிருந்து ரூ.4,568-ஆக 4 சதவீதமும், கொல்கத்தாவில் ரூ.5,633-இலிருந்து ரூ.5,839-ஆக 4 சதவீதமும் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் அதிக மாற்றமில்லாமல் நிலையாக இருந்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ப்ராப்டைகா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் 2025 வரையிலான காலாண்டில், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), தில்லி-என்.சி.ஆா், சென்னை, புணே, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா ஆகிய எட்டு நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது. முந்தைய காலாண்டோடு (அக்டோபா்-டிசம்பா் 2024) ஒப்பிடுகையில், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் 5 சதவீதமும், அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் 4 சதவீதமும் வீடுகளின் சராசரி விலையில் உயா்வு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள கட்டுமானச் செலவுகள், நிலத்தின் விலை மற்றும் தொழிலாளா் கூலி அதிகரிப்பு காரணங்களால் இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் வீடுகளின் சராசரி விலை மும்பை எம்எம்ஆரில் சதுர அடிக்கு ரூ.12,600-ஆகவும், தில்லி-என்.சி.ஆரில் ரூ.8,106-ஆகவும், சென்னையில் ரூ.7,173-ஆகவும், புணேயில் ரூ.7,109-ஆகவும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது.எனினும், பெங்களூரில் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.7,536-இலிருந்து ரூ.7,881-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. ஹைதராபாத்தில், ரூ.7,053-இலிருந்து ரூ.7,412-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. அகமதாபாத்தில், ரூ.4,402-இலிருந்து ரூ.4,568-ஆக 4 சதவீதமும், கொல்கத்தாவில் ரூ.5,633-இலிருந்து ரூ.5,839-ஆக 4 சதவீதமும் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.