ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!
ஒரே நாளில் 2 முறை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு

தங்கம் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் தங்கத்தின் விலை ஒரேநாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.750 உயர்ந்து சவரன் ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து 8,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கும் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.8,765-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் சவரன் ரூ.70,000-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
அதேசமயம் வெள்ளியின் விலையில் காலை ஒரு கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று(மே 12) ஒரே நாளில் இரண்டு முறை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணத்தால், கடந்த வாரம் தங்கம் விலை திடீர் ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...