27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதால் சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 624.82 புள்ளிகள் சரிந்து 81,551.63 புள்ளிகளாகவும், நிஃப்டி 174.95 புள்ளிகள் சரிந்து 24,826.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :27 மே 2025, 5:28 pm IST

மும்பை: வங்கி, ஐடி மற்றும் ஆட்டோ பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து, இரண்டு நாள் ஏற்ற - இறக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் சரிந்து முடிந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,054.75 புள்ளிகள் அதாவது 1.28 சதவிகிதம் சரிந்து 81,121.70 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் நிலையற்ற அமர்வில், 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 624.82 புள்ளிகள் சரிந்து 81,551.63 புள்ளிகளாகவும், நிஃப்டி 174.95 புள்ளிகள் சரிந்து 24,826.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை மற்றும் உற்பத்தி உற்பத்தி தரவு நாளை வெளியிடப்படவுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்த நிலையில், இந்த வார இறுதியில் அறிவிக்கப்படவுள்ள முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்கள் குறித்தும் நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர்.

சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமென்ட் அதிகபட்சமாக 2.21 சதவிகிதம் சரிந்ததும், அதனை தொடர்ந்து ஐடிசி 2.01 சதவிகிதம் சரிந்தது. டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, எச்சிஎல் டெக், மஹிந்திரா & மஹிந்திரா, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எடர்னல் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்த நிலையில் இண்டஸ்இண்ட் வங்கி, சன் பார்மா, அதானி போர்ட்ஸ், நெஸ்லே மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

ஆசிய சந்தைகளில் பலவீனம் காரணமாக முதலீட்டாளர்கள் இன்றைய வர்த்தகத்தில் லாப முன்பதிவைத் மேற்கொண்டதால் உள்நாட்டில் பங்குச் சந்தை சரிந்து முடிந்தன. அதே வேளையில் சிறு மற்றும் நடுத்தர பங்குகள் ஒப்பீட்டளவில் மீள்தன்மையுடன் வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிந்த நிலையில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்த நிலையில், நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) மூடப்பட்டிருந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.135.98 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.51 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 65.07 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.