வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.8.57 கோடி!

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸ்ரீராம் பிராபர்டீஸ் லிமிடெட் அதன் செப்டம்பர் வரையான காலாண்டு முடிவில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.8.57 கோடியாக உள்ளதாக அறிவித்தது.

News image

ஸ்ரீராம் பிராபர்டீஸ் லிமிடெட் - கோப்புப் படம்

Updated On :12 நவம்பர் 2025, 7:27 pm IST

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸ்ரீராம் பிராபர்டீஸ் லிமிடெட், செப்டம்பர் வரையான அதன் காலாண்டு முடிவில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.8.57 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ரூ.0.79 கோடி நிகர இழப்பை சந்தித்தது. நிதியாண்டின் 2-வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.229.01 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்ரீராம் பிராபர்டீஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கோபாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

நிதி செயல்திறன் சற்று மந்தமாக உள்ள நிலையில் இடைநிலை சிக்கல்கள் தளர்த்தப்பட்டதால், இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதி ஆரோக்கியமான மீட்சியை எதிர்பார்க்கிறோம் என்றார்.

இந்தியாவின் முன்னணி குடியிருப்பு ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒன்றான ஸ்ரீராம் பிராபர்டீஸ் லிமிடெட் சென்னை, பெங்களூரு, புனே மற்றும் கொல்கத்தாவில் தனது இருப்பைக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.