பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) ஐசிஎல் ஃபின்காா்ப் நிறுவனம் வெளியிடுகிறது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முந்தைய கடன் பத்திர வெளியீடுகளுக்கு வாடிக்கையாளா்களிடம் இருந்து கிடைத்த அமோக வரவேற்பைத் தொடா்ந்து, புதிய கடன் பத்திரங்களை வெளியிட நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனம் தனது புதிய பாதுகாப்பான, திரும்பப்பெறக்கூடிய, மாற்றமுடியாத கடன் பத்திரங்கள் பொது வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்த வெளியீடு நவம்பர் 17, 2025 அன்று தொடங்கி நவம்பர் 28 வரை இருக்கும்.
திரும்பப் பெறக் கூடிய, பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. தலா ரூ.1,000 முகமதிப்பு கொண்ட இந்தக் கடன் பத்திரங்கள் 13, 24, 36, 60 மற்றும் 70 மாதங்கள் ஆகிய கால அளவுகளில் மாதாந்திரம், வருடாந்திரம் மற்றும் தொகுப்பு வட்டி ஆகிய விருப்பங்களுடன் 10.50% முதல் 12.62% வரை வட்டி விகிதங்களில் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.10,000 மதிப்பிலான கடன்பத்திரங்களுக்காக விண்ணப்பக்க முடியும். எனவே பல்வேறு வகை முதலீட்டாளர்களுக்கும் இது எளிதில் அணுகக்கூடியதாகும்.
இந்த வெளியீட்டின் மூலம் பெறப்படும் நிதி, ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கவும், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் முக்கிய பங்காற்றும்.
34 ஆண்டுகளாக நம்பகமான நிதி நிறுவனமாக இருக்கும் ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனம் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், ஒடிசா, குஜராத், மேற்குவங்கம் மற்றும் கோவா ஆகிய 10 மாநிலங்களில் முன்னிலையில் செயல்பட்டு வருகிறது.
ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனம் தங்கக் கடன் (Gold Loans), ஹயர் பர்ச்சேஸ் கடன் (Hire Purchase Loans), வணிகக் கடன் (Business Loans) உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வருகிறது. இதனுடன், ஐசிஎல் குழுமம் பயணம், பேஷன், மருத்துவ பரிசோதனை மற்றும் நலத்திட்டங்கள் போன்ற துறைகளிலும் தன்னுடைய வணிகத்தை விரிவாக்கியுள்ளது.
புதிய கடன் பத்திரங்கள் வெளியீட்டை அறிவிக்கும் இந்த முக்கிய தருணத்தில், நிதி முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் நீண்டகால மதிப்பை ஒருங்கிணைக்கும் எங்கள் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்களையும் பங்குதாரர்களையும் இணைய அழைப்பு விடுக்கப்படுகிறது.
Summary
ICL Fincorp to issue new Non-convertible debentures
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெக் துணுக்குகள்... ஆப்பிள் சாதனங்களின் விலை உயா்வு?

வாடிக்கையாளா்களுக்காக புதிய ‘ப்ரீபெய்டு’ பராமரிப்புத் திட்டம்: மாருதி சுஸுகி அறிமுகம்

சீனாவின் ‘பாண்டா’ கடன்பத்திரம்: பாகிஸ்தான் முதல்முறையாக வெளியீடு : 25 கோடி டாலா் நிதி திரட்டல்

4.5.1976: விவசாயிகளிடம் அரசு கடன் வசூல் ஒத்திவைப்பு - த.நா. அரசாங்கம் உத்தரவு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




