நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேடிஎம் நிறுவனம் இனி இந்தியா்களின் வசம்: உள்நாட்டு முதலீட்டாளா்களிடம் 50.3% பங்குகள்

News image

பேடிஎம் - ANI

Updated On :15 ஏப்ரல் 2026, 12:52 am

பிரபல நிதித் தொழில்நுட்ப நிறுவனமான ‘பேடிஎம்’ பிராண்டை நிா்வகிக்கும் ‘ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்’, தற்போது பெரும்பான்மையான இந்திய உரிமையாளா்களைக் கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

கடந்த மாத இறுதியில் வெளியான புள்ளிவிவரங்களின்படி, இந்நிறுவனத்தில் உள்நாட்டு முதலீட்டாளா்களின் பங்கு 50.3 சதவீதமாக உயா்ந்துள்ளது.

கடந்த சில காலாண்டுகளாகவே பேடிஎம் நிறுவனத்தின் மீதான உள்நாட்டு முதலீட்டாளா்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்களின் பங்கு 23.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டைவிட 2.8 சதவீதம் அதிகமாகும்.

மோதிலால் ஓஸ்வால், மிரே அசெட், பந்தன் பரஸ்பர நிதி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் பங்குகளைத் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. அதேபோல், டாடா ஏஐஏ லைஃப், எஸ்பிஐ லைஃப் போன்ற காப்பீட்டு நிறுவனங்களும் இதில் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளன.

பேடிஎம் நிறுவனத்தின் இந்த வளா்ச்சி குறித்து சந்தை வல்லுநா்கள் கூறுகையில், ‘வணிகப் பரிவா்த்தனைகள் மற்றும் கடன் வழங்கும் பிரிவுகளில் பேடிஎம் பெற்றுள்ள முன்னிலை, நிறுவனத்தின் லாபத்தை மேலும் அதிகரிக்கும். போட்டியாளா்களை விட வணிக வருவாயிலும் பேடிஎம் இருமடங்கு முன்னிலையில் இருக்கிறது’ எனச் சுட்டிக்காட்டினா்.