நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ரூ.18,999-க்கு ஒன்பிளஸ் N6x அறிமுகம்... சிறப்பம்சங்கள் என்ன?

ஒன்பிளஸ் N6x ஸ்மார்ட்போன் பற்றி..

News image

ஒன்பிளஸ் N6x

Updated On :1 ஆகஸ்ட் 2026, 4:30 pm IST

ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் N6x ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் N6 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பேட்டரி லைஃப் நீடித்து உழைக்கும் தண்மை கொண்டது. பல ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் ஸ்மார்ட்போன்களில் இல்லாத 3.5mm ஹெட்போன் ஜாக் அம்சத்தையும் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.

ஒன்பிளஸ் N6x சிறப்பம்சங்கள் என்ன?

ஒன்பிளஸ் N6x ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஹெடி+ (1570*720 பிக்சல்கள்) எல்சிடி ஸ்கிரீன், ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டைமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 16 கொண்டிருக்கும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 7000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பைப் பொறுத்தவரை ஒன்பிளஸ் N6x கடந்தாண்டு வெளியான ஒன்பிளஸ் நோர்ட் CE5 மாடலில் இருந்து பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஒன்பிளஸ் N6x-ன் விலை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியண்ட் ரூ. 18,999-ல் இருந்து தொடங்குகிறது. இது பர்கண்டி ரெட் மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

OnePlus N6x was launched in India on Friday as the second addition to the tech firm's recently introduced N series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.