ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

6 விருதுகளை வென்ற சிட்டி யூனியன் வங்கி!

ஐபிஏ தொழில்நுட்ப மாநாட்டில் ஆறு விருதுகளைப் பெற்ற சிட்டி யூனியன் வங்கி.

News image

மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் 21-ஆவது ஆண்டு தொழில்நுட்ப மாநாடு, கண்காட்சி, விருது வழங்கும் விழாவில் 3-ஆவது ஆண்டாக தொடர்ந்து 6 பிரிவுகளில் வென்ற சிட்டி யூனியன் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி என்.காமகோடியிடம் விருதுகளை வழங்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி.ரபி சங்கர்.

Updated On :19 ஜனவரி 2026, 1:54 pm IST

சென்னை: மும்பையில் நடைபெற்ற ஐபிஏ தொழில்நுட்ப மாநாட்டில் சிட்டி யூனியன் வங்கி ஆறு விருதுகளை வென்றுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிட்டி யூனியன் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (Indian Banks’ Association – IBA) வழங்கும் ஐபிஏ தொழில்நுட்ப மாநாட்டில் 6 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது.

இந்த விருதுகள், 9 ஜனவரி 2026 அன்று மும்பையில் நடைபெற்ற 21வது ஆண்டு தொழில்நுட்ப மாநாடு, கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா(2024–25) இல் வழங்கப்பட்டது.

சிறந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல்ML பயன்பாடு(Best AI&ML adoption), சிறந்த தொழில்நுட்ப வங்கி (Best Technology Bank), சிறந்த டிஜிட்டல் நிதி உள்ளடக்கம் (Best Digital Financial Inclusion), சிறந்த டிஜிட்டல் விற்பனை (Best Digital Sales), சிறந்த தகவல் தொழில்நுட்ப இடர் மேலாண்மை (Best IT Risk management) ஆகிய பிரிவுகளில் முதலிடத்துக்கான விருதுகளையும், Best Fintech & DPI Adoption என்ற பிரிவில் இரண்டாம் இடத்துக்கான விருதையும் சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது.

இந்த விருதுகளை, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநர் டி. ரபி சங்கர் வழங்கினார்.

IBA தொழில்நுட்ப விருதுகள் பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கட்டண மற்றும் சிறு நிதி வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளையும் அங்கீகரித்து. வங்கித் துறையில் புதுமையான சிந்தனைகள், தொழில்நுட்ப முயற்சிகள், மேலாண்மைத் திறன் மற்றும் திறம்பட செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் போட்டித் திறனை மேம்படுத்திய வங்கிகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள் வங்கித் துறையில் மிகுந்த மதிப்பும், உயர்வும் கொண்டதாக கருதப்படுகின்றன. கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப மற்றும் வணிக முன்னேற்றங்களை அடைந்த வங்கிகளை கௌரவிப்பதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.

IBA Technology Awards இல், மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து, சிட்டி யூனியன் வங்கி  6 -க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

City Union Bank has won six awards at the IBA Technology Conference held in Mumbai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.