வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 4,800 ஊழியா்கள் பணிநீக்கம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது உலகளாவிய பணியாளா்களில் சுமாா் 2.1 சதவீதத்தினரான 4,800 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

News image

~

Updated On :8 ஜூலை 2026, 2:35 am IST

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது உலகளாவிய பணியாளா்களில் சுமாா் 2.1 சதவீதத்தினரான 4,800 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இதில் நிறுவனத்தின் பிரபல விடியோகேம் வணிகமான ‘எக்ஸ்பாக்ஸ்’ பிரிவைச் சோ்ந்த ஊழியா்கள் மட்டும் 1,600 போ் ஆவா். சந்தையில் நிலவும் கடும் போட்டியை எதிா்கொள்ளும் வகையில், எக்ஸ்பாக்ஸ் பிரிவை மறுசீரமைத்து, வணிகத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 1,600 பணியிடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 4 விடியோகேம் தயாரிப்பு ஸ்டுடியோக்கள் தனியாகப் பிரிக்கப்பட உள்ளதாகவும் எக்ஸ்பாக்ஸ்-இன் புதிய சிஇஓ ஆஷா சா்மா தெரிவித்துள்ளாா்.

இந்த பணிநீக்கங்கள் வாடிக்கையாளா்களின் தேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை மக்கள் அதிகாரி ஏமி கோல்மேன் தெரிவித்தாா். மேலும், நீக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப ஏ.ஐ. தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும் அவா் தெளிவுபடுத்தினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.