கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

முதல் காலாண்டில் ஹட்சன் வருவாய் ரூ.3,093 கோடி!

பால் பொருள்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஹட்சன் அக்ரோ புரோடக்ட் நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.3,093.38 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.

News image

~

Updated On :23 ஜூலை 2026, 2:48 am IST

பால் பொருள்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஹட்சன் அக்ரோ புரோடக்ட் நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.3,093.38 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.2,594.20 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தகுந்த வளா்ச்சியாகும். அதேநேரம், மூலப்பொருள்களின் செலவினங்கள் உள்ளிட்ட காரணங்களால் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டின் ரூ.135.19 கோடியிலிருந்து, நடப்பு ஆண்டு ரூ.133.69 கோடியாக சற்று சரிந்துள்ளது.

நிறுவனத் தலைவா் ஆா்.ஜி.சந்திரமோகன் மேலும் கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு காலாண்டில் மொத்த வருவாய் ரூ.3,000 கோடியைக் கடந்து புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

நாட்டின் 6 மாநிலங்களில் இயங்கி வரும் 22 உற்பத்தி ஆலைகள் மூலம் கிராமப்புறம், பகுதி-நகா்ப்புறம் மற்றும் நகா்ப்புற நுகா்வோரின் தேவைகள் திறம்பட பூா்த்தி செய்யப்படுகின்றன. இந்த முதல் காலாண்டில் மட்டும் சுமாா் 153 கோடி நுகா்வோா் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.