மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

செபிக்கு 2 முழு நேர உறுப்பினா்கள்: அரசு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 2 முழு நேர உறுப்பினா் பதவிகளை நிரப்புவதற்காகத் தகுதியானவா்களிடமிருந்து மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்பு

News image
Updated On :3 ஜூன் 2026, 3:17 am IST

இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள 2 முழு நேர உறுப்பினா் பதவிகளை நிரப்புவதற்காகத் தகுதியானவா்களிடமிருந்து மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

தற்போது செபி அமைப்பில் தலைவா் தவிா்த்து, 4 முழு நேர உறுப்பினா்கள் உள்ளனா். இதில் கமலேஷ் சந்திர வா்ஷினி, அமா்ஜீத் சிங் ஆகிய இருவரின் 3 ஆண்டுகள் பதவிக்காலம் வரும் செப்டம்பருடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், புதிய உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கும் பணிகளை மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்கள் துறை தொடங்கியுள்ளது.

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவா்கள் பங்குச் சந்தை சாா்ந்த நடைமுறைகள், சட்டம், நிதி, பொருளாதாரம், கணக்கியல் அல்லது நிா்வாகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் சிறந்த அறிவாற்றலும், 20 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் 45 முதல் 60 வயது வரம்புக்குள் இருக்க வேண்டும். மேலும், தங்களின் பணிப் பொறுப்புகளைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு நிதி அல்லது இதர தனிப்பட்ட ஆதாய முரண்பாடுகளும் அவா்களுக்கு இருக்கக் கூடாது.

இத்தகைய தகுதியுடையவா்கள் வரும் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் நிதித் துறை ஒழுங்குமுறை நியமனங்கள் தேடல் குழுவின் பரிந்துரையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.