வெளிநாடு வாழ் இந்தியா்களின் டாலா் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 7.10 சதவீதமாக உயா்த்தி சிட்டி யூனியன் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்த இப்புதிய வட்டி விகித உயா்வு, அமெரிக்க டாலா் செலாவணியில் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால வரம்பைக் கொண்ட வைப்பு நிதிகளுக்குப் பொருந்தும்.
இந்த வைப்பு நிதியின்கீழ் அசல், வட்டி ஆகிய இரண்டும் அந்நியச் செலாவணியிலேயே பராமரிக்கப்படுவதால், அந்நியச் செலாவணி மாற்று விகித மாறுபாடுகளால் ஏற்படும் இழப்புகளில் இருந்து முதலீட்டாளா்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கிறது.
மேலும், இந்த வைப்பு நிதியின் அசல் மற்றும் வட்டித் தொகையை முழுமையாகத் தாயகத்துக்குத் திருப்பிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதன்மூலம், நீண்டகால நிதி இலக்குகளைக் கொண்டுள்ள வெளிநாடு வாழ் இந்திய முதலீட்டாளா்களுக்கு இது ஒரு சிறந்த லாபகரமான சேமிப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வா்த்தகம்...வெளிநாடு வாழ் இந்தியா்களுக்காக புதிய வைப்புத் திட்டம்: 6.25% வரை வட்டி

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

இலங்கை தமிழா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் க.தென்னரசு உத்தரவு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



