டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

ஜூலை 1 முதல் சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

News image

சிலிண்டர் முன்பதிவு

Updated On :25 ஜூன் 2026, 12:45 pm IST

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல்களுக்குப் பிறகு, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு செய்வது தொடர்பான பல புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சில, எரிபொருள் நிறுவனங்கள், சிலிண்டருக்கு முன்பதிவு இடைவெளியை 25 நாள்கள் மற்றும் 45 நாள்களாக நிர்ணயித்திருந்தன.

மேலும், நாட்டில் உள்ள 'ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு இணைப்பு' (அதாவது 'இரட்டை இணைப்பு கூடாது') என்ற கொள்கையை வலியுறுத்தப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட விதிமுறையில், இண்டேன் (Indane), ஹெச்பி (HP) அல்லது பாரத் (Bharat) ஆகிய நிறுவனங்களில் எதில் எரிவாயு இணைப்பு பெற்றிருந்தாலும், குழாய் மூலம் எரிவாயு இணைப்புப் பெற்றுவிட்டால், இந்திய வீட்டு உபயோக வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி (LPG) இணைப்பை ரத்து செய்வதற்கு அரசு 30 நாள்கள் கால அவகாசத்தை வழங்குகிறது.

இது தொடர்பாக 30 மற்றும் 90 நாள்கள் அவகாசம் குறித்து வெளியான அறிவிப்புகளில் மக்களுக்கு சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

30 நாள்கள் அவகாசம் எதற்கு?

தற்போது பிஎன்ஜி இணைப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள் நுகர்வோர் தங்கள் எரிவாயு சிலிண்டர் இணைப்பை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம் என்று அந்த விதி கூறுகிறது.

உதாரணமாக, ஜூன் 25 அன்று எரிவாயு குழாய் மூலம் இணைப்பைப் பெற்றால், சிலிண்டர் இணைப்பை ரத்து செய்வதற்கு 30 நாள்கள் அவகாசம். இந்த உதாரணத்தின்படி, அதற்கான காலக்கெடு ஜூலை 25 ஆகும்.

90 நாள்களாக அவகாசம் எதற்கு?

எரிவாயு சிலிண்டர் தொடர்பான 90-நாள் விதிமுறை ஒன்ற வெளியாகியிருக்கிறது. இதுதான் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படக் காரணம்.

இது குறித்து மார்ச் 24 அன்று வெளியான அறிக்கையில், மக்கள், தங்கள் பகுதியில் குழாய் வழி இயற்கை எரிவாயு வசதி இருந்தால், அனைத்து சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களும் பிஎன்ஜி இணைப்பிற்கு மாற வேண்டும் என்று அரசு அறிவித்தது.

அவ்வாறு மாறுவதற்குத்தான் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

ஒருவேளை அவ்வாறு செய்யத் தவறினால், எரிவாயு சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அறிப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை உள்ளது.

ஒருவர் வீட்டில் குழாய் மூலம் எரிவாயு இணைப்புக் கிடைத்துவிட்டால், புதிதாக எரிவாயு உருளையை முன்பதிவு செய்யக் கூடாது. இதன் மூலம், கிராமப் பகுதிகளில் அதிகம் எரிவாயு உருளை தேவைப்படும் குடும்பங்கள் பாதிக்கப்படும். அவர்களுக்குத்தான் உண்மையில் எரிவாயு மானியம் கிடைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விநியோகத்துக்கு ஓடிபி அவசியம்!

புதிய விதிமுறைப்படி, எரிவாயு உருளையை முன்பதிவு செய்தவர்களுக்கு அதனை விநியோகம் செய்யும்போது ஓடிபி பெற்று அதனை தெரிவிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.

எனவே, எல்பிஜி வாடிக்கையாளர்கள், தங்களது எல்பிஜி கணக்குடன் சரியான செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பிரதமரின் உஜ்வாலா திட்டம்

பிரதமர் உஜ்வாலா திட்டத்தில் எரிவாயு இணைப்புப் பெற்றவர்கள் இகேஒய்சி உறுதி செய்ய வேண்டும். செயலிகள் மூலமாகவும் இதனை செய்யலாம்.

Summary

Changes to cylinder booking coming from July 1st! Is it good news?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.