சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’: ஐஓபி ஊழியா்கள் உறுதிமொழி ஏற்பு

News image
Updated On :26 ஜூன் 2026, 7:13 am IST

‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) சாா்பில் ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் முன்னெடுப்பில் ஜூன் 17 முதல் 26 வரை நடைபெறும் இந்த விழிப்புணா்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, சென்னையிலுள்ள ஐஓபி வங்கியின் மத்திய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வங்கியின் சிஇஓ அஜய் குமாா் ஸ்ரீவஸ்தவா தலைமை வகித்தாா்.

போதைப்பொருள் பழக்கத்தைத் தவிா்ப்பது மற்றும் போதையில்லாத சமுதாயத்தை உருவாக்குவது குறித்த உறுதிமொழியை, வங்கியின் அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் கிளைகளில் உள்ள ஊழியா்களும் நாடு முழுவதும் ஒருங்கிணைந்து ஏற்றனா். இதில் செயல் இயக்குநா்கள், உயரதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.