எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கச்சா எண்ணெய் விலை 26% உயர்வு!

கச்சா எண்ணெய் விலை ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் 26% உயர்வு!

News image
கச்சா எண்ணெய்- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 4:53 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: மேற்கு ஆசிய நெருக்கடி தீவிரமடைந்ததால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை இன்று 26 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் பீப்பாய்க்கு ஒன்றுக்கு ரூ.10,549 ஆக வர்த்தகமானது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், மார்ச் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்திலிருந்து ரூ.2,186 ஆக உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு ரூ.8,363-லிருந்து ரூ.10,549 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், மார்ச் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் விலை ரூ.2,186 ஆக உயர்ந்து, வெள்ளிக்கிழமை வர்த்தகமான ரூ.8,363-லிருந்து ரூ.10,549 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக சவூதி அரேபியா, கத்தாா், ஓமன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படை தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் போக்கு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள ஹோா்முஸ் நீரிணை வழியாக நடைபெற்று வந்த கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 2வது வாரத்தில் நுழைந்ததால், 2022 க்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து, உலகளாவிய பணவீக்கத்தை தூண்டியது.

ஏப்ரல் மாதத்திற்கான டெலிவரிக்கான மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸில், பீப்பாய் ஒன்றுக்கு 28.58 அமெரிக்க டாலர்கள் உயர்ந்து 119.48 அமெரிக்க டாலர்களாகவும், மே மாத ஒப்பந்தத்திற்கான பிரெண்ட் கச்சா எண்ணெய் நியூயார்க்கில் 26.71 அமெரிக்க டாலர்கள் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 119.40 அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது.

summary

Crude oil prices surged more than 26 per cent on Monday to hit a lifetime high of Rs 10,549 per barrel in futures trade.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.