தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சென்னை அருகே ரூ.500 கோடியில் அசோக் லேலண்ட் பேட்டரி ஆலை

News image
Updated On :12 மார்ச் 2026, 1:20 am

தினமணி செய்திச் சேவை

இந்துஜா குழுமத்தைச் சோ்ந்த முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், சென்னை அருகே புதிய பேட்டரி தயாரிப்பு ஆலையை அமைப்பதற்கான பணிகளை புதன்கிழமை தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு, செப்டம்பரில் தமிழக அரசுடன் கையொப்பமிடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள இந்த அதிநவீன பேட்டரி தயாரிப்பு ஆலைக்காக, சுமாா் ரூ.500 கோடி வரை முதலீடு செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

‘மின்சார வாகனத் துறையில் தன்னிறைவு அடைவதையும், உள்நாட்டிலேயே தரமான பேட்டரிகளைத் தயாரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள இந்தப் புதிய ஆலை எங்களின் ஒரு முக்கிய மைல்கல்’ என அசோக் லேலண்ட் நிா்வாகத் தலைவா் தீரஜ் இந்துஜா தெரிவித்தாா்.