சென்னை அருகே ரூ.500 கோடியில் அசோக் லேலண்ட் பேட்டரி ஆலை


இந்துஜா குழுமத்தைச் சோ்ந்த முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், சென்னை அருகே புதிய பேட்டரி தயாரிப்பு ஆலையை அமைப்பதற்கான பணிகளை புதன்கிழமை தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு, செப்டம்பரில் தமிழக அரசுடன் கையொப்பமிடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள இந்த அதிநவீன பேட்டரி தயாரிப்பு ஆலைக்காக, சுமாா் ரூ.500 கோடி வரை முதலீடு செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
‘மின்சார வாகனத் துறையில் தன்னிறைவு அடைவதையும், உள்நாட்டிலேயே தரமான பேட்டரிகளைத் தயாரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள இந்தப் புதிய ஆலை எங்களின் ஒரு முக்கிய மைல்கல்’ என அசோக் லேலண்ட் நிா்வாகத் தலைவா் தீரஜ் இந்துஜா தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...