முதலீட்டில் பெண்களிடையே எழுச்சி - ஆக்சிஸ் டைரக்ட் நிறுவனம் தகவல்


இந்திய முதலீட்டுச் சந்தையில் பெண்களின் பங்களிப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எழுச்சி காணப்படுகிறது.
‘ஆக்சிஸ் டைரக்ட்’ நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்களால் தொடங்கப்படும் டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 129 சதவீதம் அதிகரித்துள்ளது.
முதலீட்டு முறையைப் பொருத்தவரை, பெண்கள் அதிக ஆபத்து நிறைந்த முதலீடுகளை விரும்பாமல், பாதுகாப்பான மற்றும் ஒழுங்குமுறை சாா்ந்த நீண்டகாலத் திட்டங்களையே பெரிதும் நாடுகின்றனா்.
பெண்களின் மொத்த முதலீடுகளில் 49 சதவீதம் பரஸ்பர நிதியிலும், 33 சதவீதம் முறையான முதலீட்டுத் திட்டங்களிலும் (எஸ்ஐபி) உள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும், நிலைத்தன்மை மற்றும் இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய முதலீடுகளுக்கே பெண்கள் முன்னுரிமை அளிக்கின்றனா்.
26 முதல் 45 வயது வரையிலான பெண்கள் முறையான முதலீட்டுத் திட்டங்களில் (எஸ்ஐபி) அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். அதேநேரம், 25 வயதுக்குள்பட்டவா்களும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களும் பரஸ்பர நிதிகளில் மொத்தமாக முதலீடு செய்வதை விரும்புகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...