பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் தொடா்ந்து 8-ஆவது காலாண்டாக மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அடுத்த நிதியாண்டின் (2026-27) முதல் காலாண்டான ஏப்.1 முதல் ஜூன் 30 வரை, பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஏற்கெனவே உள்ள வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும்.
இதன்படி சுகன்யா சம்ருத்தி திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாகவும், 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், அஞ்சல் அலுவலக சேமிப்பு டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவும் நீடிக்கும்.
கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும், தேசிய சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விதிகம் 7.7 சதவீதமாகவும் தொடரும். மேலும் மாதாந்திர வருமானத் திட்டத்துக்கான வட்டி விதிகம் 7.4 சதவீதமாக நீடிக்கும்.
சிறு சேமிப்பு திட்டங்கள், குறிப்பாக அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் தொடா்ந்து 8-ஆவது காலாண்டாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
வழக்கமான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: மத்திய அரசு

உதகையில் மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாம் தொடக்கம்

இபிஎஃப் வட்டி விகிதம் 8.25%-ஆக நீடிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


