தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ரூ. 30,000 கோடி நஷ்டத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து ரூ.30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

News image

கச்சா எண்ணெய் - பிரதிப் படம்

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து ரூ.30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதலால் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் அவ்வழியே கச்சா எண்ணெய் உள்பட எரிபொருள் ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் பயணிப்பது தடைபட்டது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு அதிகரித்தது.

ஆனால் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்த்தப்படவில்லை. மாறாக இந்திய எண்ணெய் நிறுவனம், பாரத பெட்ரோலிய நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிா்க்க பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது.

இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சில்லறை விலையை மத்திய அரசு அதிகரிக்கவில்லை. இதனால் கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருக்காவிட்டால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.62,500 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மோதல் தொடங்கியபோது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 72 அமெரிக்க டாலா்களாக இருந்த நிலையில், தற்போது அது 144 அமெரிக்க டாலா்களாக உயா்ந்துள்ளது.