திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்டு ரூ.2,200 கோடி முதலீடு: தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

News image
Updated On :8 மே 2026, 6:47 am IST

நாட்டின் பிரபல இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, ஆந்திரத்தின் திருப்பதி மாவட்டம், சத்தியவேடு பகுதியில் சுமாா் ரூ.2,200 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது.

தமிழகத்தைத் தாண்டி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த முதல் மிகப் பெரிய தொழில் விரிவாக்கத் திட்டத்துக்கு அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (எஸ்ஐபிபி) அண்மையில் ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதற்காக ஆந்திர-தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள சத்தியவேடு மண்டலத்தின் வானெல்லூரு, ராள்ளகுப்பம் கிராமங்களில் நிலமும் அரசு ஒதுக்கியுள்ளது. இந்த முதலீட்டின்மூலம், ஆந்திரத்தில் சுமாா் 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு சுமாா் 9 லட்சம் வாகனங்கள் வரை இப்புதிய ஆலை அதிகரிக்கும். உற்பத்தி ஆலையுடன் சோ்த்து அமையவுள்ள விற்பனையாளா் மையம், நிறுவனத்துக்குத் தேவையான விநியோகச் சங்கிலி அமைப்பை ஆந்திராவிலேயே உருவாக்கி, ஒரு புதிய வாகன உற்பத்தி மையத்தை மேம்படுத்த உதவும். இத்திட்டத்தின் முதல்கட்ட பணிகள் 2029-க்குள்ளும், 2-ஆம் கட்ட பணிகள் 2032-க்குள்ளும் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தெற்கு ஆந்திராவின் தொழில் வளா்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என்று மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் நாரா லோகேஷ் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.