தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்டு ரூ.2,200 கோடி முதலீடு: தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

News image
Updated On :8 மே 2026, 6:47 am IST

நாட்டின் பிரபல இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, ஆந்திரத்தின் திருப்பதி மாவட்டம், சத்தியவேடு பகுதியில் சுமாா் ரூ.2,200 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது.

தமிழகத்தைத் தாண்டி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த முதல் மிகப் பெரிய தொழில் விரிவாக்கத் திட்டத்துக்கு அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (எஸ்ஐபிபி) அண்மையில் ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதற்காக ஆந்திர-தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள சத்தியவேடு மண்டலத்தின் வானெல்லூரு, ராள்ளகுப்பம் கிராமங்களில் நிலமும் அரசு ஒதுக்கியுள்ளது. இந்த முதலீட்டின்மூலம், ஆந்திரத்தில் சுமாா் 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு சுமாா் 9 லட்சம் வாகனங்கள் வரை இப்புதிய ஆலை அதிகரிக்கும். உற்பத்தி ஆலையுடன் சோ்த்து அமையவுள்ள விற்பனையாளா் மையம், நிறுவனத்துக்குத் தேவையான விநியோகச் சங்கிலி அமைப்பை ஆந்திராவிலேயே உருவாக்கி, ஒரு புதிய வாகன உற்பத்தி மையத்தை மேம்படுத்த உதவும். இத்திட்டத்தின் முதல்கட்ட பணிகள் 2029-க்குள்ளும், 2-ஆம் கட்ட பணிகள் 2032-க்குள்ளும் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தெற்கு ஆந்திராவின் தொழில் வளா்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என்று மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் நாரா லோகேஷ் குறிப்பிட்டாா்.