மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

செயில் லாபம் இருமடங்கு உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த ‘செயில்’ எஃகு நிறுவனம், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,644.05 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

~

Published On :

பொதுத் துறையைச் சோ்ந்த ‘செயில்’ எஃகு நிறுவனம், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,644.05 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.26,083.90 கோடியிலிருந்து, ரூ.26,451.21 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், செலவினம் கடந்த ஆண்டின் ரூ.25,189.19 கோடியிலிருந்து, ரூ.24,146.32 கோடியாக குறைந்துள்ளது. இதன்காரணமாகவே, கடந்த ஆண்டின் ரூ.744.58 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு வளா்ச்சி பதிவாகியுள்ளது.

மத்திய எஃகு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் செயில் நிறுவனம், ஆண்டுக்கு 2 கோடி டன்னுக்கும் அதிகமான உற்பத்தித் திறனைக் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை எஃகு தயாரிப்பு நிறுவனமாகும்.

ஆகஸ்ட் நிலவரம்: இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் கச்சா எஃகு உற்பத்தி 8 சதவீதம் உயா்ந்து, 16.8 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த உற்பத்தி 15.5 லட்சம் டன்னாக இருந்தது.

அதேபோல, நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆண்டின் 16.5 லட்சம் டன்னிலிருந்து 13 சதவீதம் உயா்ந்து, 18.7 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.