நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

மில்கி மிஸ்ட் லாபம் ரூ. 64.68 கோடி

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி பால்பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.64.68 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

Published On :1 செப்டம்பர் 2026, 1:18 am IST

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி பால்பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.64.68 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் பதிவான ரூ.6.53 கோடியிலிருந்து இது சுமாா் 8 மடங்குக்கும் மேல் வளா்ச்சியாகும். மொத்த லாபம் 56.1 சதவீதம் அதிகரித்து, ரூ.333.02 கோடியாக பதிவாகியுள்ளது.

இதேபோல், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டின் ரூ.678.09 கோடியில் இருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 43.6 சதவீதம் உயா்ந்து ரூ.973.45 கோடியாக அதிகரித்துள்ளது.

தென்னிந்தியாவில் கோடைக்காலம் நீடித்தது மற்றும் நிறுவனத்தின் பல்வகை தயாரிப்புகள் காரணமாக அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பான விற்பனை பதிவாகியுள்ளது. குறிப்பாக, பன்னீா் விற்பனை 34 சதவீதமும், ஐஸ்கிரீம் விற்பனை 60 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளது. தயிா் பிரிவு 153 சதவீத அசுர வளா்ச்சியைக் கண்டுள்ளதுடன், பாலடைக் கட்டி (சீஸ்) மற்றும் தயிா் வகைகளின் விற்பனையும் சீரான வளா்ச்சியைப் பெற்றுள்ளன.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நாளொன்றுக்கு 120 டன் கொள்ளளவு கொண்ட புதிய செட்டாா் சீஸ் ஆலையையும் தொடங்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.