கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காசு போடுங்க கமல்..!

நாங்கள் சென்னைக்கு புறப்பட்டு வரும் போது, "ஏம்ப்பா... சென்னைக்குப் போய் என்னய்யா பண்ணப்போறீங்க.." என்று கேட்டார் அம்மா. "நாங்க டிராமாவுக்கு மியூசிக் போடுவோம். லைட் மியூசிக் பண்ணுவோம்.." என்றேன்.

News image
Updated On :22 மே 2019, 11:48 am

DIN


நாங்கள் சென்னைக்கு புறப்பட்டு வரும் போது, "ஏம்ப்பா... சென்னைக்குப் போய் என்னய்யா பண்ணப்போறீங்க.." என்று கேட்டார் அம்மா. "நாங்க டிராமாவுக்கு மியூசிக் போடுவோம். லைட் மியூசிக் பண்ணுவோம்.." என்றேன்.

"ஒண்ணுமே கிடைக்கலன்னா என்ன பண்ணுவீங்க.." அடுத்த கேள்வி கேட்டார். "ஒண்ணுமே இல்லைன்னா... ப்ளாட்பார்ம்ல உட்கார்ந்து வாசிப்போம்.. " என்றேன். "என்னப்பா... இப்படி சொல்றீங்க..?"

"ஆமாம்மா... மேடை என்பதே ப்ளாட்பார்ம்தான்.. கம்யூனிஸ்ட் கட்சி மேடை கூட ப்ளாட்பார்ம்தான்.. எங்கே வாசித்தாலும் மக்கள் வரத்தான் போறாங்க.." என்றேன்.

Story image


"என்னமோ சொல்றீங்கப்பா.. எனக்கு ஒண்ணும் புரியலை.." என்றார் அம்மா.

அன்னக்கிளி வாய்ப்பு வந்தது. இசையமைப்பாளராக வெற்றிபெற்றாயிற்று. அடுத்தடுத்தப் படங்களில் வாய்ப்பு. ஆனால், அம்மாவிடம் விளையாட்டாகச் சொன்னதைச் செய்து பார்த்தால் என்ன? ஒரு நாள் ஆர்மோனியம், தபேலாவுடன் பீச்சுக்குப் போனோம். பீச்சில் வாசிக்கிற மாதிரி வரிசையாகப் படம் எடுத்துக் கொண்டு வருகிறோம். அப்போது அந்தப் பக்கம் 'சிகப்பு ரோஜாக்கள்' படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படத்துக்கு முன்னாடி நான், பாஸ்கர், அமர் மூன்று பேரும் அங்கே இருந்த ப்ளாட்பாரத்தில் உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்து விட்டோம். வாசித்துக் கொண்டிருப்பதை கமல் பார்த்து எங்களிடம் வந்தார்.

"கொஞ்சம் பொறுங்க.. ஏதாவது துண்டு போடுங்க.." என்றார். அங்கிருந்த ஒருவர் படப்பிடிப்பில் இருந்த விரிப்பு ஒன்றை கொண்டு வந்து விரித்தார். "துண்டு மட்டும் போதுமா.. காசு போடுங்க.." என்றோம். படப்பிடிப்பில் இருந்தவர்கள் எல்லோரும் காசு போட அந்த இடமே கலகலகப்பானது.

- இளையராஜா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.