மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று என்னவாகப் போகிறது என்று யோசிக்கிறாராம் அடுத்த வாரிசு. அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்திய ஆட்சியில் இடம் பெறுவதால், பெண் வாரிசின் கைதான் ஓங்கும் என்றும், கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்காது என்றும் கருதுகிறாராம் அவர். ஆனால், தனக்கு எதிராக வழக்குகள் இருக்கும் நிலையில், மக்களவையில் கணிசமான இடங்களை வென்று அடுத்து அமையும் ஆட்சியில் இடம் பெற்றால்தான் பாதுகாப்பு என்று கருதுகிறாராம் பெண் வாரிசு. மகனா, மகளா பாசப் போராட்டத்தில் மனம் நொந்து போய் இருக்கிறாராமே தலைவர், மெய்யாலுமா?