

'கோலிளக்கம்' மலையாளப் படப்பிடிப்பின் பொழுது, ஹெலிகாப்டர் சண்டைக்காட்சியில் நடித்த ஜெயன் இறந்துவிட , அதே காட்சியில் வில்லனாக நடித்த பாலன் கே.நாயர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரைப் பார்க்க சென்றிருந்தவன், அவரிடம் நலன் விசாரித்து பேசிக்கொண்டிருக்கையில், 'ஜெயன் எப்படியிருக்கிறார்? (ஜெயன் இறந்த விபரம் அவருக்கு தெரியாது) என்று பாலன் கே நாயர் வினவ, அவரிடம் உண்மையைச் சொன்னால் அதிர்ச்சியில் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்படலாம் என்று எண்ணி..ம்..ம்..குணமாகி நன்றாகத்தான் இருக்கிறார் என்று கூறி நடிக்க வேண்டியதாயிற்று.
பின்னால் பாலன் கே நாயருக்கு உண்மை தெரிந்த பின் என்னைப்பற்றி என்ன நினைத்தாரோ என்று எனக்குள் சஞ்சலப்பட்டுக் கொள்வேன். அதன்பின் அவரை எப்போது சந்தித்தாலும் அவரிடம் நடித்த அந்த சம்பவம்தான் நினைவுக்கு வரும்.
அதன் பின் வாழ்வில் எப்படிப்பட்ட சந்தர்ப்பம் வந்தாலும் பொய்யாக நடிப்பதை தவிர்த்து விட்டேன். அந்த நிலைக்கு மாறியதால் இன்று எனக்கு நண்பர்கள் அதிகம் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.