பதச் சேதம் | சொற் பொருள் |
| சோதி இம வேதண்ட கன்னிகையர் தந்த அபிநய துல்ய சோம வதன | சோதி: ஜோதி, இம: பனி, வேதண்டம்: மலை=இமயமலை; கன்னிகையர்: தோழியர்; அபிநய: அலங்காரம்; துல்ய: பரிசுத்தமான; சோம=சந்திரன்= சந்திரனைப் போன்ற திருமுகம் |
| துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த | துங்க: பெருமை நிறைந்த, த்ரிசூலதரி: திரிசூலத்தை ஏந்தியவள்; கங்காளி: எலும்பு மாலையை அணிந்தவள்; சிவகாம சுந்தரி: உமையம்மை; பயந்த: பெற்ற, |
| நிரைசேர் ஆதி நெடு மூதண்ட அண்ட பகிரண்டங்கள் யாவும் கொடும் சிறகினால் | நிரைசேர்: வரிசையாக அமைந்த; ஆதி: தொன்மையான, நெடு: நீண்ட; மூதண்ட அண்ட: பழைமையான அண்டங்கள் பகிரண்ட: அண்டகோளத்துக்கு வெளியே உள்ள அண்டங்கள், கொடும் சிறகு: வளைந்த (கோடிய) சிறகு |
| அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே அணைக்கும் கலாப மயிலாம் | அருகில் வரும் தன்னுடைய பெண்மயில் இட்ட முட்டைகளை(க் காப்பது போலவே); கலாப: தோகை |
| நீதி மறை ஓது அண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம் | நீதி நிறைந்ததாகிய வேதங்களில் சொல்லப்படும்; நித்தர்: நித்திய சூரிகள்; பரவு கிரியாம்: போற்றும் மலையாம் |
| நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியாகுலன் சங்கு வாள் | நீலகிரி: திருத்தணிகை; நிராலம்பன்: (தனக்கு எந்தப்) பற்றுக்கோடும் இல்லாதவன்; நிர்ப்பயன்: பயமற்றவன், பயத்தைத் தீர்ப்பவன்; நிர்வியாகுலன்: நிராகுலன், நிர்வியாகுலன் இரண்டும் கவலையற்றவன் என்று பொருள்படும், கவலையைக் களைபவன் என்று பொருள்கொள்வது பொருந்தும் |
| மா திகிரி கோதண்டம் தண்டம் தரித்த புயன் மாதவன் முராரி திருமால் | மாதிகிரி: பெரிய சக்ராயுதம்; கோதண்டம்: சார்ங்கம் என்னும் வில்; தண்டம்: கௌமேதகி என்னும் கதாயுதம்; முராரி: முரன் என்ற அரக்கனை வதைத்தவன் |
| மதுகைடவாரி திரு மருகன் முருகன் குமரன் வரமுதவு வாகை மயிலே. | மது, கைடபன் என்ற அரக்கர்களை அழித்தவன். வாகை: வெற்றி. |
</p><p align="JUSTIFY"><iframe src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/234077933&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" /></p><p align="JUSTIFY"><br /><strong>சோதி</strong> ... ஜோதிவடிவம் கொண்டவனாக</p><p align="JUSTIFY"><strong>இம வேதண்ட</strong> ... இமயமலையிலே</p><p align="JUSTIFY"><strong>கன்னிகையர் தந்த</strong> ... (உமையம்மையின்) தோழியர்கள் பாதுகாத்துத் தந்தவனும்,<br /><br /><strong>அபிநய</strong> ... அலங்காரமானவளும்,</p><p align="JUSTIFY"><strong>துல்ய</strong> <strong>சோம வதன</strong>.. பரிசுத்தமான நிலவைப் போன்ற (மாசில நிலவு) முகத்தைக் கொண்டவளும் (கருணை ததும்பும் முகம் கொண்டவளும்)</p><p align="JUSTIFY"><strong>துங்க</strong> ... பெருமை மிக்க, சிறந்த,</p><p align="JUSTIFY"><strong>திரிசூலதரி</strong> ... திரிசூலத்தைக் கையில் தரித்தவளும் <br />கொண்டவளும்,<br /><br /><strong>கங்காளி</strong> ... எலும்பு மாலையை அணிந்தவளும்,</p><p align="JUSTIFY"><strong>சிவகாம சுந்தரி</strong> ... சிவனையே எப்போதும் விரும்புபவளும் அழகியுமான உமையம்மை,</p><p align="JUSTIFY"><strong>பயந்த</strong> ... ஈன்ற, படைத்த,</p><p align="JUSTIFY"><strong>நிரை சேர்</strong> ... ஒழுங்கும் வரிசையும் கொண்ட,</p><p align="JUSTIFY"><strong>ஆதி நெடு</strong> ... தொன்மை நிறைந்த, நீண்ட பரந்துள்ளதுமான,</p><p align="JUSTIFY"><strong>மூதண்ட அண்டம்</strong> ... மிகப் பழைய அண்டகோளங்கள்,</p><p align="JUSTIFY"><strong>பகிரண்டம் யாவும்</strong> ... (பகிர்:வெளியே) அண்டங்களுக்கு வெளியே உள்ள புற அண்டங்கள், எல்லாவற்றையும்,</p><p align="JUSTIFY"><strong>கொடும் சிறகினால்</strong> ... வளைந்த தனது சிறகினால்,</p><p align="JUSTIFY"><strong>அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே</strong> ... தன்னுடைய பேடை இட்டதாகிய முட்டைகளை அடைகாக்கும் ஆண்மயிலைப் போல,<br /><br /><strong>அணைக்கும் கலாப மயிலாம்</strong> ... அண்டங்கள் புறஅண்டங்கள் அனைத்தையும் தன் சிறகுகளால் மூடிப் பாதுகாக்கின்ற மயில்</p><p align="JUSTIFY">(உமையம்மை படைத்த முட்டை வடிவிலான அண்டங்களை மயில் தன் சிறகால் மூடிப் பாதுகாக்கிறது. இப்படிப்பட்ட மயில் யாருடையதோ என்று கேட்டால்)</p><p align="JUSTIFY"><strong>நீதிமறை</strong> ... பல தர்மங்களை உணர்த்தும் வேதங்கள்,</p><p align="JUSTIFY"><strong>ஓது</strong> ... சொல்கின்ற,</p><p align="JUSTIFY"><strong>அண்ட</strong> ... வெளி உலகங்களில் வாழும்,</p><p align="JUSTIFY"><strong>முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு</strong> ... முப்பத்து மூன்று கோடி நித்தியசூரிகளும் (தேவர்களும்) போற்றுகின்ற,</p><p align="JUSTIFY"><strong>கிரியாம்</strong> ... மலையாகிய,</p><p align="JUSTIFY"><strong>நீலகிரி வேலவன்</strong> ... திருத்தணியில் வாழும் வெலாயுதன்,</p><p align="JUSTIFY"><strong>நிராலம்பன்</strong> ... (அனைத்துக்கும் தானே பற்றுக்கோடாக இருந்தாலும்) தனக்கென்று ஒரு பற்றுக் கோடும் இல்லாதவன்,</p><p align="JUSTIFY"><strong>நிர்பயன்</strong> ... பயமில்லாதவன், பயத்தை அறுப்பவன்</p><p align="JUSTIFY"><strong>நிர்வியாகுலன்</strong> ... மனத் துன்பம் இல்லாதவன், மனத்துன்பத்தை வேரறுப்பவன்</p><p align="JUSTIFY">(கருதிக் கருதிக் கவலைப்படுவார் கவலைக்கடலைக் கடியும் வடிவேல்—பாரதி)<br /><br /> </p><p align="JUSTIFY"><strong>சங்கு</strong> ... பாஞ்சஜன்யம் என்ற சங்கையும்,</p><p align="JUSTIFY"><strong>வாள்</strong> ... நாந்தகம் எனும் வாளையும்,</p><p align="JUSTIFY"><strong>மா திகிரி</strong> ... பெருமை மிக்க சுதர்சனம் என்ற சக்கரத்தையும்,</p><p align="JUSTIFY"><strong>கோதண்டம்</strong> ... சார்ங்கம் என்ற வில்லையும்,</p><p align="JUSTIFY"><strong>தண்டம்</strong> ... கெளமேதகி என்ற கதாயுதத்தையும்,</p><p align="JUSTIFY"><strong>தரித்த புயன்</strong> ... தரித்துள்ள (ஏந்தியுள்ள) தோள்களைக் கொண்டவனும்,</p><p align="JUSTIFY"><strong>மாதவன் முராரி திருமால்</strong> ... மாதவனும் முரன் என்ற அரக்கனை வதைத்தவனும்,<br /><br /><strong>மதுகைட வாரி</strong> ... மது கைடபர் என்ற இரண்டு அரக்கர்களைக் கொன்ற திருமாலுக்கும்,<br /><br /><strong>திரு</strong> ... திருமகளுக்கும்,</p><p align="JUSTIFY"><strong>மருகன்</strong> ... மருமகனான</p><p align="JUSTIFY"><strong>முருகன் குமரன்</strong> ... முருகவேள் குமரக் கடவுளின்,</p><p align="JUSTIFY"><strong>வரமுதவு வாகை மயிலாம்</strong> .. அடியார்களுக்கு வேண்டும் வரத்தைத் தரும் வெற்றி மயில்தான் அது.</p><p align="JUSTIFY">சுருக்கமாக,</p><p align="JUSTIFY">திருமாலின் மருகனான முருகனுடைய மயில், உமாதேவியார் படைத்த அத்தனை அண்டங்களையும், தன் பேடையின் முட்டைகளைச் சிறகால் அணைத்துக் காப்பதைப்போலக் காக்கிறது.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

