/

பகுதி - 398

நாள்தோறும் உன்னை முத்தமிழினால்

Updated On :2 நவம்பர் 2016, 10:16 am

பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இப்பாடல், ‘நாள்தோறும் உன்னை முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே’ என்று வேண்டுகிறது. இறைவனை ‘சுத்த தமிழ்ஆர் ஞான முருகோனே’ என்று விளிக்கிறது.

ஒற்றொழித்து அடிக்கு 25 எழுத்துகள்; 5, 6, 12, 13, 19, 20 ஆகிய எழுத்துகள் நெடில், மற்றவை குறில்;  சீரான இடைவெளிகளில் வல்லொற்று பயில்கிறது.  ஒவ்வோரடியிலும்  ஒன்று, மூன்று, ஐந்தாம் சீர்களில் தொடர்ச்சியாக எதுகை அமைந்திருக்கிறது.

தத்ததன தானான தத்ததன தானான
      தத்ததன தானான                   தனதான

கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய
         கட்டுவிடு மோர்கால             மளவாவே
      கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு
         கற்புநெறி தான்மாய              வுயர்காலன்
இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி
         யிட்டவிதி யேயாவி              யிழவாமுன்
      எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத
         இட்டமினி தோடார              நினைவாயே
துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்
         தொக்கில்நெடு மாமார்பு          தொளையாகத்
      தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால
         சுத்ததமி ழார்ஞான               முருகோனே
மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ
         மத்தமயில் மீதேறி               வருநாளை
      வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
         வைத்தபடி மாறாத               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.