மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 530

பிறவி என்னும் துன்பம் ஓயோதோ

Updated On :10 ஏப்ரல் 2017, 6:30 pm

‘எனக்கு இது வேண்டும்’ என்று நான் நாடாததாகிய இந்தப் பிறவி என்னும் துன்பம் ஓயோதோ’ என முறையிட்டு இறைவனுடைய தரிசனத்தைக் கோரும் இந்தப் பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்று நீக்கி 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களிலுள்ள இரண்டு எழுத்துகளும் நெடில்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் உள்ள ஐந்தைந்து எழுத்துகளும் குறில்.  இந்தச் சீர்களில் மூன்றாவதாக அமைந்துள்ள வல்லொற்று எழுத்துக் கணக்கில் சேராதது.  இருப்பினும் இந்த வல்லின, மெல்லின ஒற்றுகள்தாம் தாளத்தின் திருப்புமுனையாக அமைவதைப் பார்க்கிறோம்.

தானா தனத்ததன தானா தனத்ததன
      தானா தனத்ததன                   தனதான

நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
         நாயே னரற்றுமொழி             வினையாயின்
      நாதா திருச்சபையி னேறாது சித்தமென
         நாலா வகைக்குமுன             தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக் குழறி
         வாய்பாறி நிற்குமெனை          அருள்கூர
      வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
         வாரே னெனக்கெதிர்முன்         வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
         தோலா சனத்தியுமை            யருள்பாலா
      தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
         தோழா கடப்பமல                ரணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
         மேராள் குறத்திதிரு              மணவாளா
      ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
         ஈடேற வைத்தபுகழ்               பெருமாளே

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.