/

பகுதி- 718

என்னை அடிமைகொண்டு ஆண்டருளவேண்டும்

News image
Updated On :16 டிசம்பர் 2017, 6:30 pm

‘என்னை அடிமைகொண்டு ஆண்டருளவேண்டும்’ என்று கோருகின்ற இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளையும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் ஒரு நெடிலைக் கொண்ட மூன்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும் கொண்டவை.


தந்ததன தானதன தத்தான
      தந்ததன தானதன தத்தான
      தந்ததன தானதன தத்தான                தனதான

சந்தனச வாதுநிறை கற்பூர
         குங்குமப டீரவிரை கத்தூரி
         தண்புழுக ளாவுகள பச்சீத              வெகுவாச

சண்பகக லாரவகு ளத்தாம
         வம்புதுகி லாரவயி ரக்கோவை
         தங்கியக டோரதர வித்தார             பரிதான

மந்தரம தானதன மிக்காசை
         கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர
         வஞ்சகவி சாரஇத யப்பூவை            யனையார்கள்

வந்தியிடு மாயவிர கப்பார்வை
         அம்பிலுளம் வாடுமறி வற்றேனை
         வந்தடிமை யாளஇனி யெப்போது        நினைவாயே

இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார
         சம்ப்ரமம யூரதுர கக்கார
         என்றுமக லாதஇள மைக்கார           குறமாதின்

இன்பஅநு போகசர சக்கார
         வந்தஅசு ரேசர்கல கக்கார
         எங்களுமை சேயெனரு மைக்கார       மிகுபாவின்

செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
         குன்றெறியும் வேலின்வலி மைக்கார
         செஞ்சொலடி யார்களெளி மைக்கார     எழில்மேவும்

திங்கள்முடி நாதர்சம யக்கார
         மந்த்ரவுப தேசமகி மைக்கார
         செந்தினகர் வாழுமரு மைத்தேவர்      பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.