ரமணர் சொல்வதைப் போன்ற ‘மனநாசத்தைக்’ கோரும் இந்தப் பாடல் கருவூருக்கு அருகே இருக்கும் திருவெஞ்சமாக்கூடல் என்ற தலத்துக்குரியது. இப்பாடலில் ‘வேற்கானத்து உறைவோனே’ என்று வரும் இடத்தில் திருவேற்காடு குறிக்கப்படுகிறது. இங்கே உள்ள முருகன் ஆலயம் வேறு தற்போது திருவேற்காடு என்றாலே நினைக்கு வரும் ஆலயம் வேறு என்பதை இதற்கு முன்னாலும் குறித்திருக்கிறோம்.
அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகள் என்ற மிகச் சிறிய தாள அமைப்பைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளும், ஒரு நெட்டெழுத்தும் இடையில் பயிலும் (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் அமைந்தவை. இரண்டு நான்கு ஆகிய சீர்கள் ஒரு நெடிலும், ஒரு குறிலும், ஒரு வல்லொற்றுமாய் அமைந்தவை.
தந்தனாத் தானத் தனதான
வண்டுபோற் சாரத் தருள்தேடி
மந்திபோற் காலப் பிணிசாடிச்
செண்டுபோற் பாசத் துடனாடிச்
சிந்தைமாய்த் தேசித் தருள்வாயே
தொண்டராற் காணப் பெறுவோனே
துங்கவேற் கானத் துறைவோனே
மிண்டராற் காணக் கிடையோனே
வெஞ்சமாக் கூடற் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டுள்ளேன்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

செங்கல்பட்டில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


