/

பகுதி - 570

தொண்டுசெய்ய வேண்டும் என்று

Updated On :30 மே 2017, 11:14 am

தொண்டுசெய்ய வேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் திருக்கழுக்குன்றத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் இடையில் ஒரு வல்லொற்றையும் கொண்டவை; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளையும் ஒரு வல்லொற்றையும் ஒரு மெல்லொற்றையும் கொண்டவை; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு வல்லொற்றையும் கொண்டவை; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்கள் நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளைக் கொண்டவை. 

தனத்த னத்தந் தத்தன தானன
      தனத்த னத்தந் தத்தன தானன
      தனத்த னத்தந் தத்தன தானன             தனதானா

அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில
         தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்
         அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு     கணையாலே
      அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்
         நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
         அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ     சிலநாள்போய்
இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்
         மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட
         லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை   முதிர்வாயே
      எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்
         மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன
         திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு  னருள்தாராய்
புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி
         படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்
         புகைக்க னற்கள் பெற்றவர் காதலி      யருள்பாலா
      புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
         சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை
         புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன்      மருகோனே
திகழ்க்க டப்பம் புட்பம தார்புய
         மறைத்து ருக்கொண் டற்புத மாகிய
         தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை யணைசீலா
      செகதி லுச்சம் பெற்றம ராவதி
         யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி
         திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய     பெருமாளே.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.