ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 676

திருவடியை நினைக்கவேண்டும்

News image
Updated On :28 அக்டோபர் 2017, 4:12 am

திருவடியை நினைக்கவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் கதிர்காமத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட சிறிய வடிவம்.  முதற் சீரில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டாம் சீரில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; மூன்றாம் சீரில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு ஒற்றெழுத்தும்; தொங்கல் சீரில் எப்போதும் போல நான்கெழுத்துகளும் அமைந்து இரட்டித்துள்ளன.

தனன தான தத்த                         தனதான 

எதிரி லாத பத்தி                          தனைமேவி
      இனிய தாள்நி னைப்பை             யிருபோதும்

இதய வாரி திக்கு                         ளுறவாகி
      எனது ளேசி றக்க                   அருள்வாயே

கதிர காம வெற்பி                         லுறைவோனே
      கனக மேரு வொத்த                புயவீரா

மதுர வாணி யுற்ற                        கழலோனே
      வழுதி கூனி மிர்த்த                 பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.