ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 656

திருவடிக்குத் தொண்டாற்ற

News image
Updated On :20 செப்டம்பர் 2017, 3:16 am


திருவடிக்குத் தொண்டாற்றக் கோரும் இத் திருப்புகழ் திருப்பரங்குன்றத்துக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகளும் அமைந்துள்ளன.

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
                தனத்தத் தந்தனந் தனதான

தடக்கைப் பங்கயங் கொடைக்குக் கொண்டல்தண்
               டமிழ்க்குத் தஞ்சமென் றுலகோரைத்

தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
               தளர்ச்சிப் பம்பரந் தனையூசற்

கடத்தைத் துன்பமண்  சடத்தைத் துஞ்சிடுங்
              கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வைக்  

கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
              கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே 

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
             புரக்கக் கஞ்சைமன் பணியாகப்

பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
            பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா 

குடத்தைத் தென்பரங் பொருப்பிற் றங்குமங்
           குலத்திற் கங்கைதன் சிறியோனே 

குறிப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
           குவித்துக் கும்பிடும் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.